பூநகரி வீதியில் பாலங்களில் உள்ள 3 மில்லியன் பெறுமதியான இரும்புகள் கொள்ளை

by

திட்டமிட்ட சிலரால் கிளிநொச்சி- பரந்தன் - பூநகரி B-357 வீதியில் உள்ள பாலங்களின் இரும்புகளை கொள்ளையிட்டு விற்பனை செய்துள்ளதால், சேதமடைந்த பாலங்களை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நான்கு மில்லியன் பெறுமதியான புதிய இரும்புகளை நேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த வீதியில் அமைந்துள்ள குடாமுறுட்டி மற்றும் சங்குப்பிட்டி ஆகிய பாலங்களில் உள்ள இரும்புகளை கொள்ளையிட்டுள்ளதுடன், குடாமுறுட்டி பாலத்தில் இருந்து மாத்திரம் மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்புகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதனால் பாரமான வாகனங்கள் பாலத்தில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை நடத்திய கிளிநொச்சி பொலிஸார் 12 ஆயிரம் கிலோ கிராம் இரும்பை வைத்திருந்த இரும்பு வியாபாரி ஒருவரை கைது செய்துள்ள போதிலும் பாலத்தில் இருந்த இரும்புகளை கொள்ளையிட்டவர்களை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது