இலங்கையில் கொரோனா நோயாளிகள் திடீர் அதிகரிப்பு - இன்றும் எண்ணிக்கையில் உயர்வு

by

இலங்கையில் இதுவரையில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் ஏனையோர் குவைத்திலிருந்து இந் நாட்டுக்கு வந்த நிலையில் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இன்று ஒருவர் உயிரிழந்ததோடு இதுவரையில் இலங்கையில் கொரோனா தாக்குதலால் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.