https://s3.amazonaws.com/adaderanatamil/1590395770-CSE-Media-Release-New-CSE-Mobile-app-launched-to-offer-investors-greater-access-to-market-information.jpg

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை கால எல்லை பிற்பகல் 2.30 வரை நீடிப்பு

நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிற்பகல் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க தீர்மானித்துள்ளதால் கொழும்பு பங்குச்சந்தையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.