https://s3.amazonaws.com/adaderanatamil/1590396491-1590395819-Coronavirus_L.jpg

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து வருகை தந்து மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 7 பேருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளது.