சீசெல்ஸ் நாட்டிலிருந்து 35 பேருடன் கொண்டு வரப்பட்ட கறுப்பு பணம்

by

வேறு உள்நோக்கத்துடனேயே சீசெல்ஸ் நாட்டில் தங்கியிருந்த 35 பேரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சீசெல்ஸ் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் பணம் அவர்கள் வந்த விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே எந்தளவு தொகை கறுப்பு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

உலகில் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் ஒரே நாடு இலங்கை. வேறு நாடுகளில் இதனை மேற்கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.