செய்தியாளரை அச்சுறுத்திய ஐந்து பேரும் நாளை வரை விளக்கமறியலில்

by

அளுத்கமை நகரில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நோன்புப்பெருநாள் நிகழ்வுகளை நேற்று காணொளியாக பதிவு செய்ய சென்றபோது அளுத்கமை நகரில் வைத்து சிலரால் செய்தியாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவரின் வாகனத்தையும் சேதம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் செய்தியாளர் பண்டாரகம பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.