http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__891170680522919.jpg

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது என்று காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை முதல் குல்காம் மாவட்டத்தின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. 34 ராஷ்டிரிய ரைபிள்ஸ் (ஆர்.ஆர்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் குல்காம் மாவட்ட காவல்துறை ஆகியோர் இந்த துப்பாக்கிச் சண்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.