https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/EY1nCy9VAAAuaJm.jpg

தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

by

தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் தனியாக பயணம் செய்துள்ளான். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை தில்லியில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில், 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக பயணம் செய்துள்ளான். 

விமான நிலையத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல வந்த சிறுவனின் தாயார் இதனை உறுதி செய்துள்ளார். 'எனது 5 வயது மகன் விஹான் சர்மா தில்லியில் இருந்து தனியாகப் பயணம் செய்துள்ளான். அவன் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருவுக்கு வந்துள்ளான்' என்றார். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/EY1nFjbU4AAaBqQ.jpg
https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/EY1nEtHU8AMK1ts.jpg