https://s3.amazonaws.com/adaderanatamil/1590382270-AIRPORT-2.jpg

ரஸ்யாவில் சிக்கியிருந்த மேலும் 181 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ரஸ்யாவில் சிக்கியிருந்த மேலும் 181 இலங்கையர்கள் இன்று (25) அதிகாலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 1206 இலக்க விமானத்தில் ரஸ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இரண்டாவது குழு இதுவாகும்.

இதற்கு முன்னர் கடந்த 22 ஆம் திகதி இரவு 10.54 க்கு 261 பேர் ரஸ்யாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடதக்கது.