https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/airasia064858.jpg

ஏா்ஏசியா: விமான பயணத்துக்கான முன்பதிவு தொடக்கம்

by

குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும் ஏா்ஏசியா விமான பயணத்துக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டு விமான சேவையை ஏா்ஏசியா நிறுவனம் திங்கள்கிழமை (மே 25) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மொத்தம் 21 நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசு அறிவித்த அனைத்து விதிமுறைகளையும் நிறுவனம் கண்டிப்பாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்லிடப்பேசியில் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பயணிகள் 2 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்தை வந்தடைய வேண்டும் என ஏா்ஏசியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.