பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்படும் 150 கைதிகள்

by

கொழும்பு வெலிகடை, மெகசீன் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 150 கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள 40 கைதிகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு சிறைச்சாலைகளில் இருந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ள கைதிகள் போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்படும் இந்த கைதிகளை தடுத்து வைக்க விசேட விடுதி ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடுதியில் பணிக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்க உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.