இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்

by

இலங்கையில் நேற்றிரவு 11.55 மணி வரையில் கொரோனா நோயாளிகள் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் முழுமையான எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 52 நோயாளிகளில் 49 பேர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய மூவரில், ஒருவர் இந்தோனேஷியாவில் இருந்து வந்தவர் எனவும், இருவர் கடற்படை சிப்பாய்கள் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 457 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.