வானிலை மையம் வெளியிட்டுள்ள இன்றைய எதிர்வுகூறல்

by

இலங்கையில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அவ் எதிர்வுகூறலுக்கமைய, மத்திய மலைநாட்டின் மேற்குபகுதியில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில இடங்களில் காற்றும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.