https://s3.amazonaws.com/adaderanatamil/1590345417-1588901366-corona-test_L.jpg

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1140 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.