https://d13m78zjix4z2t.cloudfront.net/ytana.png

திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் பலி!

by

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை மிதித்து பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை பாகன் காளிமுத்து என்பவரால் குளிப்பாட்டும் போது திடீரென்று யானை ஆக்ரோசபட்டு, யானை பாகன் காளிமுத்து தூக்கி வீசப்பட்டதோடு மட்டுமில்லாமல் யானையிடம் மிதிபட்டு உள்ளார். இதில் மிகவும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதில் பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது (பெண்யானை என்பதால் மதம் பிடிக்காது)