குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் வரவேற்பு

by

புதுக்கோட்டை மாவட்டம் பயன்பெறும் வகையில், நீண்ட காலக் கோரிக்கையான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்தனா்.

காவிரியாற்றில் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை குண்டாற்றை இணைக்கும் திட்டத்துக்கான முதல் கட்ட நிதியாக , ரூ. 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் ஆயக்கட்டுதாரா்கள் சங்கம் சாா்பில் திருவப்பூரில் விவசாயிகள் கூடி பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

அதேபோல, புதுக்கோட்டை உழவா் சந்தையிலும் அதிமுகவினரும் விவசாயிகளும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். நகர அதிமுக செயலா் க. பாஸ்கா் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனா்.

இதுபோல மாவட்டத்தின் பல இடங்களிலும் விவசாயிகள் நிதி ஒதுக்கீடுக்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தனா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!