http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__651958644390107.jpg

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதல்வர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்திய 3 பெண்கள் கைது

சென்னை : சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதல்வர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்திய காய்த்ரி கந்தாடை  உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அம்பேத்கர் மணிமண்டபம் அருகே காதலர் தின கொண்டாட்டம் என்று கூறி சிஏஏவுக்கு எதிராக பெண்கள் முழக்கம் இட்டனர்.முதல்வர் வருவதற்கு சற்று முன்பு ராதிகா, பிரியங்கா உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் கைது செய்தது.