https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/2/original/Supreme_Court.png

உச்ச நீதிமன்றத்தில் பவர்பேங்க் ஏற்படுத்திய வெடிகுண்டு பீதி

by

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பீப் சத்தம் வந்ததால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 4வது வளாகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஆனால் இன்று இந்த பீப் சத்தத்தால், பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு குவிந்திருந்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், யாருமற்ற ஓரிடத்தில், காலியான பையில் இருந்து பீப் சத்தம் கேட்டது. ஆனால், பரிசோதித்துப் பார்த்ததில், அந்தப் பையில் இருந்த பவர் பேங்கில் இருந்து அந்த சத்தம் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்த வெடிகுண்டு பதற்றம் நீங்கியது. இந்த சம்பவம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்ததால், வழக்கு விசாரணை எதுவும் பாதிக்கப்படவில்லை.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!