http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__478130519390107.jpg

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் : பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்

*ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

*1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.