https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/7/original/metro.jpg

பட்ஜெட்: மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்

by

சென்னை: சென்னையின் இருவேறு திசைகளை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிதாக சென்னையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52.1 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் , ஓசூர், ஈரோடு ஆகியவை மாதிரி நகரங்களாக உருவாக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!