https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/25/original/home_loan.jpg

பட்ஜெட்: தமிழகத்தில் சொந்த வீடு கனவோடு இருப்பவர்களுக்கான அறிவிப்பு

by

சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
வரும் நிதியாண்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

அதன்படி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,099.77 கோடி ஒதுக்கப்படும்.

முதல்வரின் பசுமை வீடு திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!