பொதுமன்னிப்பு காலத்தில் 776 கடற்படை வீரர்கள் சரண்

72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர, நாட்டிற்கு தங்களுடைய சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கும் வகையில் 72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக 2020 பிப்ரவரி 05 ஆம் திகதி முதல் 2020 பிப்ரவரி 12 ஆம் திகதி வரை காலம் பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் இவ்வாரு மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.