http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__365856349468232.jpg

கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி உயர்த்தி வழங்கப்படும்: ஓ.பன்னிர்செல்வம்

சென்னை: தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பத்தாவது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது முறை இவர் நிதி அமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.