யாழ்.பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படும் மாணவர்கள்! சிறீதரன் எம்.பி

by

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படுகின்றார்கள் என நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கானபுதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் கல்விக்கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்றன. துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகள், பாடசாலைகள் கல்வி திணைக்களத்தின் கீழ் கல்வி கொள்கைகளிற்காக இயங்க வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பு அக்காலப்பகுதியில் தனியான கட்டமைப்புக்களை உருவாக்கி முன்பள்ளிகளை தரமாக வழிநடத்தினார்கள்.

ஒரு விடுதலை அமைப்பினால் இதனை கொண்டு செல்ல முடியும் எனில் ஏன் ஓர் அரசாங்கத்தினால் கொண்டு செல்ல முடியாது.

ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும் போது புதிய புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் கல்வியில் முன்னேற்றம் எட்டப்படுவதில்லை. இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக உருவாக்கப்படுகின்றன. இலங்கையின் கல்விக் கொள்கை மாறாத வரையும் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.

நாட்டின் வழிகாட்டிகளாக பல்கலைக்கழகங்கள் இருக்கும் அதேவேளை அவை உயர்ந்த பார்வையில் பார்க்கப்படுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படுகின்றார்கள்.அரசியல் என்பதற்கு அப்பால் எமது சமூகம் தவறான பாதையில் செல்கின்றது.

தற்போது எமது சமூகம் சீரழிக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தை நடார்த்தி வரும் ஆசிரியர் தனது கல்வி நிலையத்தை மூடப்போவதாக அண்மையில் குறிப்பிட்டார்.

அதாவது,போதைப்பொருள் பாவனையால் சின்னாபின்னமாகிப்போயுள்ள இளைஞர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விக்காக செல்கின்ற மாணவிகள் மீது துன்புறுத்தல்கள்,பாலியல் சேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆசிரியர் என்னிடம்தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் தொடர்பில் திரும்பி பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் ஏன், இவ்வாறானதொரு நிலைக்கு சென்றுள்ளது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயர்ந்த பார்வையில் பார்த்த நிலையில்,இன்று இவ்வாறு பின்னோக்கி சென்றமைக்கான காரணம் என்ன?

எமது வளர்ப்பு முறையில் குறைபாடுகள் உள்ளதா என்பதை பெற்றோர்களாகிய நாங்கள் நிச்சயமாக திரும்பி பார்க்கவேண்டும்.

இனிவரும் காலங்களில் பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காது போனால் மிக மோசமான சமூகமாக எமது இனம் மாறும் நிலையே இன்று காணப்படுகிறதென்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வலய கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதுடன்,இந்நிகழ்வில் கிராமத்தில் சாதனையாளர்களாக தெரிவானவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கழிவுப்பொருட்களைக்கொண்டு மோட்டார் சைக்கிளை வடிவமைத்த இந்துக்கல்லூரி மாணவனும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__1_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__2_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__4_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__5_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__6_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/2020/02/shri_newuz__7_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png