கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள்! ஹூபாய் மாகாணத்தில் கடுமையான பாதிப்பு

by

சீனாவில் கொவாட்19 வைரஸினால் காவு கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 1483 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்பத்தை போன்று புதிதாக இந்த நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் இந்த தொற்றின் காரணமாக 116 மனித இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

4823 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் இந்த தொற்றுக்கு 64600 பேர் இலக்காகியுள்ளனர்.

கொவாட்19 தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபாய் மாகாணத்தில் இன்னும் எத்தனை பேர் தொற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இரத்தப்பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளனர் என்ற கணக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.