உதயங்க வீரதுங்க CID யினரால் கைது - நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த யு.எல் - 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.