http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_940105617046357.jpg

சீனாவில் இருந்து வந்த பெண்ணை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி ஏதுமில்லை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன்

சென்னை: சீனாவில் இருந்து வந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி ஏதுமில்லை என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை தர 6 பிரத்யேக அறைகள் தயார்; 26,000 எண்ணிக்கையில் 3 அடுக்கு முகக்கவசங்கள் தயாராக உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் விரைவில் தடுப்பு மருந்துகள் வரும்; யாரும் பீதியடைய வேண்டாம். கொரோனா வைரஸ் உள்ளதா என புனே ஆய்வகத்தில் சளி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விலங்குகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் செல்லப் பிராணிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.