https://s3.amazonaws.com/adaderanatamil/1580469849-UL-1422-2.jpg

சீனா நோக்கி சென்ற சிறப்பு விமானம்

சீனாவின் வுஹானில் உள்ள இலங்கையர்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1422 என்ற சிறப்பு விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதேவேளை, சீனாவில் தற்போது 284 இலங்கையர்கள் உள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல், சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.