http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_221248805522919.jpg

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களை சோதனையிட ஹரியானாவில் சிறப்பு சோதனை மையம் அமைப்பு

ஹரியானா: சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களை சோதனையிட ஹரியானாவில் சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை பரிசோதனையிட ஹரியானாவின் மனேசரில் ராணுவத்தின் உதவியுடன் சிறப்பு மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு முதற்கட்டமாக விமான நிலையம் மற்றும் மனேசர் மருத்துவ மையத்தில் பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.