http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_581020534038544.jpg

நித்தியானந்தாவை நேரில் சந்தித்து சம்மனை வழங்க போலீசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

பெங்களூரு: நித்தியானந்தாவை நேரில் சந்தித்து சம்மனை வழங்க போலீசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார். நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று கர்நாடக போலீசிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி, நித்தியானந்தாவிடம் சம்மனை அளித்தது தொடர்பான விவரத்தை திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 50 வாய்தாக்களுக்கு மேலங் ஆஜராகாத நித்தியின் ஜாமினை ரத்து செய்ய கோரி லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.