https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/WhatsApp_Image_2020-01-31_at.jpeg

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவதை யாராலும் தடுக்க முடியாது - துரைமுருகன்

by

திருச்சி: தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக மாநாட்டில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. மாநாட்டுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

துவக்க நிகழ்ச்சியாக திமுக மாநாட்டில் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.04_PM_.jpeg

விழாவில் பேசிய துரைமுருகன், வரவே வராது என்ற உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் படியேறி திமுக நியாயம் கேட்டதாலேயே,  தேர்தலை அறிவித்தது ஆளும் அரசு.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமது வாக்குகளை சிதறடித்த கட்சிகளையே, தனது ராஜதந்திரத்தால் இன்று நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர் ஸ்டாலின்.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

முதலமைச்சர் ஆன பின்பே கலைஞர் அகில இந்திய அளவில் தலைவராக முன்னெடுத்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு முன்பே அகில இந்திய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் துரைமுருகன் கூறியுள்ளார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!