https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/pregnancy.jpg

கர்ப்பிணி பெண்கள் மது அருந்தக்கூடாது! ஏன்?

by

தற்போதைய காலகட்டத்தில் ஆண்களைப் போன்று பெண்களும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. எனினும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

அதிலும் ஆல்கஹால் அதிகமுள்ள மதுவை அருந்தும் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் ஆல்கஹால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையை பெரிதும் பாதிக்கும். குழந்தை பிறக்கும்போது எடை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. முகம் பெரிதாகத் தோன்றும். குழந்தையின் அறிவாற்றல் குறைவதற்கு வழிவகுக்கும்.

பிற்காலத்தில் குழந்தையின் நினைவுத்திறன் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தையின் கல்வி உள்ளிட்ட முக்கிய செயல்திறன் பாதிக்கப்படும். குழந்தை கருவில் இருக்கும்போதே குழந்தையின் செயல்பாடு குறைகிறது. மேலும், மரபணுவில் சில மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் மது அருந்தும்போது குடல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து கணையம், கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வினை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், கர்ப்பிணிகள் மது அருந்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் முழு பாதிப்பினையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!