கொரோனா தொற்றா என சந்தேகம் - வைத்தியசாலையில் விமானப் பணிப்பெண்

by

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் விமானப் பணிப்பெண் ஒருவர் நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அனுமதிக்க தனியான விடுதி ஒன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழு மற்றும் தாதியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு ஆடைகள் இல்லை என நீர்கொழும்பு வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.