https://s3.amazonaws.com/adaderanatamil/1580456491-ginigathhena-2.jpg

திடீர் சுகவீனமுற்ற 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமையினால் சுகவீனமுற்ற 41 மாணவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கினிகத்தேன, கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர், மாணவியே இவ்வாறு திடீர் சுகவீனமுற்றுள்ளனர்

கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற பாடசாலை விளையாட்டு போட்டியின் போது (மாலுபாண்) உட்கொண்டதுடன் மைதானத்திலுள்ள கிணற்று நீரையும் பருகியுள்ளனர்.

இதன் பின்னர் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம், மற்றும் வயிறு எரிச்சல் போன்றனர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (31) தரம் 05 தொடக்கம் 11 வரையில் கல்விப் பயிலும் 11 மாணவிகளும் 30 மாணவர்களுமாக 41 பேர் திடீரென சுகவினமுற்ற நிலையில் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையே நோய் ஏற்பட்டமைக்கான காரணமென்றும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மலையக நிருபர் இராமச்சந்திரன்-