http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_561321437358857.jpg

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. தகவல் உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.