http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_400493800640107.jpg

கொரோனா வைரஸ் அபாயம்: சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்!

புதுடெல்லி: வுஹானில் இருந்து சுமார் 400 பேருடன் ஏர் இந்தியா விமானம் நாளை அதிகாலை 2 மணிக்கு இந்தியா வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லியில் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும், இந்தியா திரும்புவோர் டெல்லி, மனேசர் பகுதியில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சீனாவிலிருந்து விமானத்தில் வருவோர் கையுறை, உடலை மறைக்கும் உறை தந்து பாதுகாப்பாக அழைத்துவரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.