ஐ.தே.கட்சி சரிவை சந்தித்து வருகிறது: அமைச்சர் சந்திரசேன

by

கனிஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவரை அசௌகரியத்திற்கு உள்ளாகியமை ஐக்கிய தேசியக் கட்சியின் பாதிப்புக்கு காரணம் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

காட் போட் மட்டை கட்சிகளை இணைத்துக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியது. இந்த அணியே பொதுத் தேர்தலிலும் போட்டியிட உள்ளது.

விரிவான கூட்டணி அவசியமில்லை மக்களின் ஆதரவே அவசியம். மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்னுடன் இன்று இணையவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி தற்போது சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட அடுத்த முறை அந்த கட்சி பெறாது. நாங்கள் பொதுத் தேர்தலில் 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை நாங்கள் பெறுவோம் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.