https://s3.amazonaws.com/adaderanatamil/1580449852-Elephant-Attack-2.jpg

காட்டு யானை தாக்கி வனத்துறை அதிகாரி ஒருவர் பலி

தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாபெல்லகடவன பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) மாலை 5 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் படுகாயமடைந்த அதிகாரி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் ஏற்பட்ட காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் காட்டு யானைகளை துரத்தியடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் போதே குறித்த வனத்துறை அதிகாரி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

55 வயதுடைய புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.