https://s3.amazonaws.com/adaderanatamil/1580443922-Arrested-2.jpg

துப்பாக்கி முனையில் கொள்ளை - மூவர் கைது

தங்காலையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை வலஸ்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சுமார் 1215 ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் வலஸ்முல்ல வீதிகந்த பகுதியில் வைத்து நேற்று காலை 10 மணியளவில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்டபுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

32, 34 மற்றும் 36 வயதுகளை உடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.