https://s3.amazonaws.com/adaderanatamil/1580441783-Govijana-mandirya-2.jpg

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதற்கமைய அந்த பிரிவை மீள ஆரம்பிப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று (31) காலை 8.30 க்கு இடம்பெற்றது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த அரசாங்க காலத்தில் குறித்த விவசாய பிரிவு பத்தரமுல்ல பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் இயங்கியதுடன் அதனால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.