http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__463421046733857.jpg

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிச.12-க்குள் தெரிவிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு, காவல்துறைக்கு உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.