சுவிஸ் தூதரக பணிப்பெண் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்!

by

அண்மையில் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரத்தின் பெண் பணியாளர் இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முன்னதாக குறித்த பணியாளர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை டிசம்பர் 12 வரை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.

ஏற்கனவே இந்த பெண் பணியாளரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீண்ட வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அவர் இன்று சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.