https://s3.amazonaws.com/adaderanatamil/1575891314-manayaveli-death-2.jpg

காணாமல் போன மீனவர் சடலமாக கரை ஒதுங்கினார்

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி பிரதேசத்தில் நேற்று (08) மதியம் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

மற்றையவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் மனையாவெளியை பிறப்பிடமாகவும் கந்தளாய் நகரில் வசிப்பிடமாக கொண்ட 42 வயதுடைய ருக்மண் த சில்வா என துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்தொழிலுக்கு சென்ற இருவரில் ஒருவர் நேற்று காயத்துடன் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு திருகோணமலை கடற்படை முகாம் வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு பின்பு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவருக்கு ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.