யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்.!

by

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.