இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! சுசில் பிரேம்ஜயந்த

by

இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து வருகைத்தந்த அதிகாரமிக்க வர்த்தக் குழுவிடம் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோ மற்றும் நடுத்தர கைத்தொழில் தொடர்பான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திடப்பட்ட நிகழ்வின்போதே இந்தக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும், ஜனாதிபதியும் இலங்கை மக்களின் மற்றும் சீன வர்த்தகர்களின் வர்த்தகத்துக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருவதாகவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.