https://s3.amazonaws.com/adaderanatamil/1575888127-rohana-laxman-2.jpg

இளைய தலைமுறையிடம் புதிய எழுச்சி

அரச தலைவரின் மற்றும் அரச செயற்பாட்டின் எளிமை காரணமாக நாட்டின் இளைய தலைமுறையிடம் புதிய எழுச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், நாடு பூராகவும் குப்பைகள் அகற்றப்பட்டு நகரங்கள் தூய்மையாக மாறி வருவதாகவும் நாடு அழகாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், நாட்டை அழகு படுத்துவதன் தேவையை உணர்ந்து இளைஞர் யுவதிகள் பாரியளவில் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்கு விரும்பிய நாடு இளைஞர்களாலேயே உருவாக்கப்படுவதை காணக்கூடியதாய் உள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.