https://s3.amazonaws.com/adaderanatamil/1575884367-kanja-2.jpg

2 கிலோ கஞ்சா மீட்பு - மூவர் கைது

போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கிண்ணியா மற்றும் புத்தளத்தில் வைத்து நேற்று (08) கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதையும், போதைப்பொருள் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்த கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கிண்ணியா, சமச்சத்தீவு பகுதியில் ஒரு சோதணை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று பரிசோதனை செய்யப்பட்டது.

குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கிண்ணியாவில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புத்தளத்தில் கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, 100 கிராம் ஹாஷிஸ் உடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 21 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் மாதம்பே மற்றும் புத்தளம் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரகள் மற்றும் போதைப்பொருள், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.