https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Yeddyurappa.jpg

அதிக வாக்குகளை அளித்து பாஜகவை வாழ்த்திய கர்நாடக மக்கள்: எடியூரப்பா 

by

இன்றைய தினத்தில் அதிக மகிழ்ச்சியான நபர் யார் என்று கேட்டால் அது கர்நாடக முதல்வர் எடியூரப்பா தான்.

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகளை அளித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில் நான் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுக்கிறேன், அதாவது மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். இனி மாநிலத்தின் மேம்பாட்டில்தான் முழு கவனம் செலுத்தப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!