https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/20/original/tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

by

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு ஆண்டில் 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். முதல்முறையாக, குறுகிய காலத்திலே, அதாவது 145 நாட்களிலேயே குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு டிசம்பர் 23ம் தேதி வரை டிசம்பர் 31 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!