துறைமுக நகரத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேலைத்திட்டங்கள்: காமினி லொக்குகே

by

துறைமுக நகரத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்போது இதற்கான மதீப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலப்பரப்பிற்குள் புதிதாக 269 ஹெக்டயர் நிலப்பரப்பை இணைத்து தற்போது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக குறித்த துறைமுக நகரத்தை நிர்வகித்தல் மற்றும் வரி நிவாரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.